ஜெயலலிதா குணமடைய, பிரதமர், ஆளுநர் வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளதாகவும் மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.



இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பியுள்ளர். அதில், ஜெயலலிதா விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேபோல், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காய்ச்சல் காரணமாக தாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து கவலை அடைந்தேன். தாங்கள் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் மக்கள் பணியாற்ற வரவேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். மக்களுடைய பிராத்தனை எப்போதும் உங்களுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...