13,305 கிராமங்களில் வறட்சி: ஒத்துக்கொண்ட முதல்வர்!!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும் என்று, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.



தென்னிந்திய மாநிலங்கள் முழுக்க வறட்சி நிலவுகிறது. குறிப்பாக கர்நாடகம், கேரளம், தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில் கர்நாடகமும், கேரளாவும் தங்களை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டன. கர்நாடகம் மத்திய அரசிடமிருந்து வறட்சி நிதியையும் பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறியபோதிலும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நிலையில் அதுபற்றி பேசும் சூழல் தமிழக அமைச்சரவையில் இல்லை. டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்தபின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் பல்வேறு தரப்பினரின் போராட்டங்களை அடுத்து வறட்சிபற்றி தெரிந்துகொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வுசெய்தார்.

இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க மத்திய அரசு ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நிதியிலிருந்து உடனடியாக ரூ.1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை போதியளவு பெய்யவில்லை. தமிழகத்தில் 66 சதவிகிதத்துக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. மேலும், 179 டி.எம்.சி. தண்ணீர் வழங்கவேண்டிய கர்நாடக அரசு வெறும் 66.5 டி.எம்.சி மட்டுமே திறந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 16,682 விவசாய கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட மொத்த நெல் அளவில் 50 சதவிகித நெல் தண்ணீர் இன்றி கருகிவிட்டது. வறட்சி பாதிப்பை ஆய்வுசெய்ய மத்திய அரசு உடனடியாக குழு ஒன்றை அனுப்ப வேண்டும். வறட்சியை ஆய்வுசெய்யும் குழு குடிநீர் தட்டுப்பாட்டையும் ஆய்வுசெய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகளில் 25.742 நீர் இருப்பே உள்ளது' என்று முதல்வர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வர்தா புயல் பாதிப்பு பற்றி அறிந்துகொள்ள மத்திய குழு வந்து சென்றுவிட்டது. ஆனால் நிவாரணம் பற்றி ஒரு தகவலும் இல்லாதநிலையில் வறட்சி பற்றியும், தண்ணீர் பற்றாக்குறை பற்றியும் ஆய்வுசெய்ய குழு வரவேண்டும் என முதல்வர் கோரியிருக்கும் நிலையில், மத்திய அரசு இதற்கும் ஒரு குழுவை மட்டும் அனுப்பி அமைதியாக இருக்குமா அல்லது செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...