4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு !!

புயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.



நடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...