ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக எம்.பி..,க்கள் குறித்து கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, முக்குலத்தோர் புலிப் படை தலைவரும், தமிழக எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்று சிவகங்கையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கருணாஸை காவல்
துறையினர் தடுத்து எச்சரித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இல்லையென்று புகார் எழுந்துள்ளநிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பது வேதனை தருவதாகவும், பீட்டா போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். தமிழக எம்.பி.,க்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என்றார்.
துறையினர் தடுத்து எச்சரித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இல்லையென்று புகார் எழுந்துள்ளநிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பது வேதனை தருவதாகவும், பீட்டா போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். தமிழக எம்.பி.,க்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என்றார்.